logo

"உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொரு செய்தியும் ஒரு மாற்றத்தின் தொடக்கம்."

📜 திருக்குறள்
Clear

குறள் 291 துறவறவியல்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

பொருள்

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

கலைஞர் உரை

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 292 துறவறவியல்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

பொருள்

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

கலைஞர் உரை

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 293 துறவறவியல்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பொருள்

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

கலைஞர் உரை

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 294 துறவறவியல்

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

பொருள்

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

கலைஞர் உரை

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 295 துறவறவியல்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

பொருள்

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

கலைஞர் உரை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 296 துறவறவியல்

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

பொருள்

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

கலைஞர் உரை

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 297 துறவறவியல்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

பொருள்

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

கலைஞர் உரை

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 298 துறவறவியல்

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

பொருள்

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

கலைஞர் உரை

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 299 துறவறவியல்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

பொருள்

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

கலைஞர் உரை

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
குறள் 300 துறவறவியல்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

பொருள்

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

கலைஞர் உரை

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

அதிகாரம் 30 : வாய்மை அறத்துப்பால்
திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருக்குறள்

"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்."

🔸 கலைஞர் உரை

உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கும் அறிவுக்கும் அடிப்படை ஆதாரம் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அதிகாரம்: 1 | குறள்: 172

🔥 பிரபல செய்திகள்

மேலும்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

2 days ago

ஐரோப்பிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்: முதலீடுகளை ஈர்க்க பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா செல்லும் பிரதமர் மோடி!

1 week ago

மாவட்டத்தின் அடையாளம் முதல் விலகல் வரை: தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் முழு பின்னணி!

2 weeks ago

💰 மார்க்கெட் அப்டேட்ஸ்

🟡 தங்கம்₹16,091/g
⚪ வெள்ளி₹300/g
📈 சென்செக்ஸ்75,084.78

🌤 வானிலை

34°C

தூத்துக்குடி

Cloudy | Humidity 57%

world map
logo

“தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற்றுள்ள இன்றைய உலகில், நவீன காலகட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்தை புரிந்துகொண்டு, நலம் தரும் செய்திகளை உடனுக்குடனும், உண்மைத் தகவல்களுடன் வழங்குவது தான் நமது நோக்கம்.”

Contact us: onepixeldigitalmedia@gmail.com

© 2026 ONEPIXEL DIGITAL MEDIA. All Rights Reserved. | Design & Developed by ONEPIXEL TECHNOLOGIES
OnePixel Logo
ONEPIXEL DIGITAL MEDIA
TAMIL NEWS & DIGITAL CONTENT
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
திருக்குறள்

பொருள்
கலைஞர் உரை
🌐 WWW.ONEPIXELDIGITALMEDIA.COM